அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து, பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிகழ்ச்சியின் போது அவர் காங்கிரஸ் கட்சிக்காக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருந்தார். இந்த நிலையில் சுப்ரியா பரத்வாஜை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்து ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
The post காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்து உத்தரவு appeared first on Dinakaran.