கோவையில் பரவலாக மழை

கோவை, மே 10: தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மேற்கொண்டனர். சென்னை வானிலை மையமும் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மலை பேய்யும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்நிலையைல் கடந்த சில தினங்களாக கோவை மாநகரில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியில் இருந்தே கோவையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழை பெய்தது. காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், பீளமேடு, கணபதி, கவுண்டம்பாளையம், ஈச்சனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் பரவலாக மழை பேய்தது. இதன் காரணாமாக் உஷ்ணம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கோவையில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.