அதே போல், நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வில் சிறு தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. இதையடுத்து நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. UGC NET தேர்வில் ஏற்பட்ட முறைகேட்டால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் ஆலோசனையால் நீட் தேர்வும் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post நீட் நுழைவுத் தேர்வு ரத்தாகுமா ?.. டெல்லியில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை!! appeared first on Dinakaran.