இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய வாலிபர் நடவடிக்கை கோரி காவல் நிலையம் முன் தர்ணா வேலூர் அருகே திருமண ஆசைக்காட்டி உல்லாசம்

வேலூர், மே 7: வேலூர் அருகே திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டுவதுடன், அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை கோரி மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். பி.காம் பட்டதாரியான இவருக்கும் லாரி டிரைவர் ஒருவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 7 மாதங்கள் மட்டுமே இளம்பெண்ணின் திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு திரும்பினார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முசாமில்(30) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர், இளம்பெண்ணுக்கு அடிக்கடி ஆறுதல் கூறி வந்துள்ளார். இதில் இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு 2 பேரும் திருமணம் செய்யாமல் ஓராண்டு அதே ஊரில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது 2 பேரும் உல்லாசமாக இருந்ததை யாருக்கும் தெரியாமல் செல்போனில் முசாமில் வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் முசாமில் துபாய்க்கு வேலைக்காக சென்று விட்டார். அங்கிருந்து வீடியோ கால் மூலம் பேசி வந்தவர், அப்போதும் இளம்பெண்ணை நிர்வாண நிலையில் பேச வைத்து அதை ஸ்கிரீன் ஷாட்டுகளாக எடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துபாயில் இருந்து வேப்பங்குப்பம் திரும்பியவர், மீண்டும் இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போதும் அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருக்கும் போதெல்லாம் நண்பர்களை வைத்து ரகசியமாக வீடியோவாக எடுத்து அதை பலருக்கும் பகிர்ந்துள்ளார். இதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தட்டிக்கேட்டதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்த முசாமில், தான் எடுத்த ஆபாச வீடியோக்கள், துபாயில் இருந்தபோது எடுத்த ஸ்கிரீன் ஷாட் போட்டோக்களை காட்டி மிரட்டியுள்ளார். இதுபற்றி இளம்பெண் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். மேலும் இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மகளிர் காவல் நிலையம் முன்பு நேற்று மதியம் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்தி காவல் நிலையத்துக்குள் அழைத்து சென்றனர். இப்புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முசாமிலை வலைவீசி ேதடி வருகின்றனர்.

The post இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய வாலிபர் நடவடிக்கை கோரி காவல் நிலையம் முன் தர்ணா வேலூர் அருகே திருமண ஆசைக்காட்டி உல்லாசம் appeared first on Dinakaran.

Related Stories: