காலை 9 மணி வரை தொழிலாளர்கள் முழுவீச்சில் உப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் மிக கடுமையாக உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளும் செய்து வருகின்றனர். இதனால் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. இதன் காரணமாக குன்றுகளை போல் ஆங்காங்கே உப்பு குவியல்கள் காட்சியளிக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
The post வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.