பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பாஜ பாதுகாப்பு தருகிறது: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு


பாட்னா: கர்நாடகாவில் நடந்த பாலியல் துஷ்பிரயோகம் விவகாரத்தில் குற்றவாளியை பாஜ பாதுகாப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரின் பாட்னாவில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘ பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கர்நாடகா மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோக்கள் தொடர்பாக விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? ஒன்றிய பாஜ அரசானது பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பி செல்வதற்கு உதவி செய்துள்ளது.

கர்நாடகாவில் சுமார் 2500 பெண்களை பிரஜ்வல் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பாஜ தலைவர்களின் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள் என்ற முழக்கம் என்ன ஆனது? பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களை பாஜ பாதுகாக்கிறது” என்றார்.

The post பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பாஜ பாதுகாப்பு தருகிறது: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: