வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தலப்புழா வனப்பகுதியில் நேற்று காலை போலீசுக்கும்,மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அடிக்கடி ஊருக்குள் ஆயுதங்களுடன் வந்து பீதியை ஏற்படுத்துவது இவர்களது வழக்கம். கடந்த வாரம் இங்குள்ள தலப்புழா வனப்பகுதியில் உள்ள கம்பமலை பகுதிக்குள் துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் புகுந்தனர். அப்போது அந்த பகுதியினரிடம் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் அறிந்ததும் போலீசார், அதிரடிப்படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் மாவோயிஸ்ட்டுகள் யாரும் சிக்கவில்லை.அவர்கள் உள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர். ஆனாலும் போலீசார் தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை தலப்புழா உள் வனப்பகுதியில் வைத்து மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரு தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 9 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் கூறினர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை appeared first on Dinakaran.

Related Stories: