இந்த தகவல் அறிந்ததும் போலீசார், அதிரடிப்படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் மாவோயிஸ்ட்டுகள் யாரும் சிக்கவில்லை.அவர்கள் உள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர். ஆனாலும் போலீசார் தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை தலப்புழா உள் வனப்பகுதியில் வைத்து மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரு தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. 9 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் கூறினர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை appeared first on Dinakaran.