பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தர்மபுரி, ஏப்.28: காரிமங்கலம் அருகே, சவுளூர் கீழ்கொல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தெய்வம். இவரது மனைவி அஞ்சனா(38). இவர்கள் காரிமங்கலம் டவுன் பகுதியில் நகை கடை வைத்துள்ளனர். கடந்த 25ம் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு டூவீலரில் தெய்வம், அஞ்சனா ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மேல் கொல்லுப்பட்டி ஏரிக்கால்வாய் பகுதியில் சென்ற போது, பின்னால் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர், திடீரென அஞ்சனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர். அவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, டூவீலரில் தப்பிய 2 மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: