அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது

அம்பை, மே 11: அம்பை கோவில்குளம், சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (37). இவர் கோவில்குளம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்.11ம் தேதி இசக்கியம்மாள் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2பேர், இசக்கியம்மாள் கழுத்தில் இருந்த 20 கிராம் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து இசக்கியம்மாள் அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிராஞ்சேரி, வெங்கடாசலபுரம், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுக கனி (24) என்பவரும், தென்காசி காசிமேஜர்புரம், வல்லப விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த கணேசன் (25) என்பவரும் சேர்ந்து இசக்கியம்மாளிடம் நகை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆறுமுக கனி, கணேசன் ஆகிய இருவரையும் நேற்று அம்பை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 கிராம் நகையை மீட்டனர். பின்னர் இவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அம்பை அருகே பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: