கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை மாத்திரை பறித்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை

சென்னை, மே 11: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள முள் புதரில் ஒரு வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக அப்பகுதியில் உள்ள மக்கள் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த கொலை வழக்கை எந்த பகுதி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று விருகம்பாக்கம், கோயம்பேடு போலீ சார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் கோயம்பேடு போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கோயம்பேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டது சென்னை கோயம்பேடு காவல்நிலைய சரித்திர பதிவேடு பகுதி சேர்ந்த பிரபல ரவுடி ஆதாம்(29). நேற்று மாலை கோயம்பேடு பகுதியில் ஒரு நபரை கத்தியை காட்டி மிரட்டி போதை மாத்திரைகளை பறித்து சென்றார். அப்போது அங்கு வந்த 10 பேர் கும்பல் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலை குறித்து 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post கோயம்பேட்டில் கத்தியை காட்டி போதை மாத்திரை பறித்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை appeared first on Dinakaran.

Related Stories: