கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

எட்டயபுரம், மே 11: எட்டயபுரம் அருகேயுள்ள மேல ஈராலை சேர்ந்தவர் மரிய மைக்கேல். இவர் குடும்பத்தோடு கேரள மாநிலம் சாத்தனூர் கொட்டியத்தில் வசித்து வருகிறார். நேற்று மேல ஈராலில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஞானராஜ் (18) என்பவர் மேல ஈராலுக்கு வந்திருந்தார். மேல ஈரால் ஊர் அருகே உள்ள கிணற்றுக்கு நன்பர்களுடன் குளிக்க சென்ற ஞானராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்த ஞானராஜ் அங்குள்ள கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் மூழ்கி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: