உடனே அவர் வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி உத்தரவின்பேரில், வனவர் சண்முகம் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனக்காவலர்கள் துளசிராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜ் வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி வேனில் பாதுகாப்பாக எடுத்து சென்று அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
The post கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை appeared first on Dinakaran.