பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஏற்றம்: தொடர் ஓட்டமும் தொடங்கியது!!

ஒலிம்பிக் போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார். அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர். கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணிக்கிறது. அது முடிந்து வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படுகிறது.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஏற்றம்: தொடர் ஓட்டமும் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: