மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி சென்னையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!: வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட சென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, முதல்வரின் சீதனம் ரூ.1000-க்கு நன்றி என இல்லத்தரசிகள் முதலமைச்சரிடம் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் வழிநெடுகிலும் மிகுந்த வரவேற்பளித்தனர்.

The post மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி சென்னையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!: வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: