சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியை நோக்கி தொழிலாளர்கள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கும்ஹாரி வழியாக சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

The post சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: