மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 15 ஆயிரம் அலுவலர்கள்

கோவை, ஏப். 6: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 15,805 அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தபால் வாக்கினை செலுத்தும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்த அந்தந்த பயிற்சி மையத்தில் இதற்கென பிரத்யேக மையம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பிரத்யேக மைத்தின் மூலமாக மட்டுமே தங்களது தபால் வாக்கினை செலுத்த முடியும்.

அஞ்சல் துறையின் மூலமாக தபால் வாக்கினை அனுப்ப இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த பாராளுமன்ற தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அவர்களுக்கு அவர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் வாக்குசாவடியிலேயே இவிஎம் இயந்திரம் மூலமாகவே வாக்குகளை செலுத்த ஏதுவாக தேர்தல் பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் தங்களது வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, 10 பயிற்சி மையங்களில் நாளை (7ம் தேதி) தபால் வாக்கு செலுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தவுள்ளனர்.

இரண்டாவது மறுபயிற்சி வகுப்பு வரும் 13-ம் தேதி நடக்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் போது, நாளை (7-ம் தேதி) நடக்கும் பயிற்சி வகுப்பில் வாக்களிக்க தவறியவர்கள் மற்றும் வேறு மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்கள், பிற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம். மேலும், இந்த இரண்டு நாட்களிலும் வாக்கு செலுத்த தவறிய வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிற அலுவலர்கள், வேறு மாவட்டத்தை சேர்ந்த வாக்களர்கள் ஆகியோர் தங்களின் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பிரத்யேக மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தின் மூலம் தபால் வாக்கினை செலுத்தலாம் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 15 ஆயிரம் அலுவலர்கள் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.