மேலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மாமல்லபுரத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வீடு வீடாக சென்று வருவாய்த்துறையினர் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வரும் 14ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மாமல்லபுரத்தில் பூத் சிலிப் விநியோகம் appeared first on Dinakaran.