துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 29 பேர் தீயில் சிக்கி பரிதாப பலி..!!

துருக்கியில், கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். இஸ்தான்புலில், 16 மாடி கட்டடம் ஒன்றின் தரை தளத்துக்கு கீழ் அமைந்துள்ள கேளிக்கை விடுதியில், உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்தன. அப்போது, வெல்டிங் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் டாங்க் வெடித்து அங்கு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கேளிக்கை விடுதியின் நுழைவாயில் குறுகலாக இருந்த நிலையில், தீ வேகமாகப் பரவியதால் 29 போ தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

The post துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 29 பேர் தீயில் சிக்கி பரிதாப பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: