20 மணி நேர போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!: கர்நாடகாவில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவம் நடந்த ஆழ்துளை கிணற்றின் பக்கத்தில், ஜெ.சி.பி., இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை பக்கவாட்டு குழி அமைத்து உயிருடன் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மீட்பு படையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

The post 20 மணி நேர போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!: கர்நாடகாவில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: