லட்சக்கணக்கானோர் திரண்டு வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார். இதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொகுதி வாரியாக சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பியும் மறுபுறம் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னையில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதாவது, நாளை காலை 10.30 மணியளவில் வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் மாதவரம் நெடுஞ்சாலை லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து காலை 11 மணியளவில் தண்டையார்பேட்டை சுங்கச்சாவடி சந்திப்பு, மாதவரம் நெடுஞ்சாலையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 4.30 மணியளவில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் எம்பியை ஆதரித்து சென்னை எழும்பூர் டானா தெருவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து தயாநிதிமாறனை ஆதரித்து நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 6.30 மணியளவில் தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் அவர் வேளச்சேரி காந்தி சிலை அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் திமுகவின் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
The post தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னையில் பிரசாரம் appeared first on Dinakaran.