140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை இடிக்க நினைக்கும் எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வராமல் இருப்பதை அந்த ராமரே முடிவு செய்வார். 2014ல் பாஜ ஆட்சி அமைக்கும் முன் ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும் நாட்டில் கலவரம் வெடிக்கும். தற்போது நிலைமை அப்படி இல்லை. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் அந்த நாட்டுக்கு சென்று பிச்சை எடுங்கள். பாஜ தேர்தலில் போட்டியிடுவது வெறும் அதிகாரத்துக்கு மட்டுமில்லை. வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டியெழுப்பவே பாஜ ஆட்சிக்கு வர நினைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று இவ்வாறு பேசினார்.
The post பாகிஸ்தானுக்கு போய் பிச்சை எடுங்கள்: உ.பி. முதல்வர் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.