டெல்லி: கேரள அரசு ரூ.10,000 கோடி கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. கேரள மாநிலம் கடன் வாங்க ஒன்றிய அரசு உச்சவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.