மூதாட்டியிடம் ஸ்கைப் கால் மூலம் சிபிஐ என மிரட்டி ரூ.10.50 லட்சம் பறிப்பு

ேகாவை, மார்ச் 31: கோவை காட்டூர் காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி (69). இவரது செல்போனில் சில நாட்களுக்கு முன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் சிபிஐ அதிகாரி எனக்கூறியுள்ளார். உங்கள் ஆதார் எண் வைத்து பல்வேறு மோசடியான கணக்கு கையாளப்பட்டிருக்கிறது. பலருக்கு உங்கள் ஆதார் கார்டு ஆதாரத்தின் மூலமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தொலை தொடர்பு துறை மூலமாக உங்களின் செல்போன் எண் கண்காணிக்கப்படுகிறது. நாங்கள் ஸ்கைப் செயலி மூலமாக உங்களிடம் பேசவேண்டும் எனக்கூறி ஸ்கைப் வீடியோ காலில் அழைத்து ஆங்கிலத்தில் பேசியுள்ளனர்.

அப்போது, அவர்கள் சிபிஐ சீருடை அணிந்திருப்பதை காட்டியுள்ளனர். நீங்கள் அந்நிய செலாவணி மோசடி நடக்கவில்லை என காட்ட வேண்டும் என்றால் 10.50 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும். நாங்கள் விசாரணை நடத்தி மோசடியில் உங்களின் தொடர்பு இல்லை என உறுதி செய்தால் உடனடியாக ஒரு மணி நேரத்தில் பணத்தை திரும்ப அனுப்பி விடுவோம் எனக்கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஜெயந்தி தனது கணவருக்கு தெரியாமல் 10.50 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன்பின், இவரது பணம் திரும்ப கிடைக்கவில்லை. இவரை தொடர்பு கொண்ட நபர் பயன்படுத்திய செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சிபிஐ அதிகாரி என மோசடியாக அந்த குழுவினர் ஏமாற்றியிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே கோவை நகரில் இதுபோல் போலீஸ், மும்பை சைபர் அதிகாரிகள் என பலரிடம் பணம் பறித்துள்ளனர். தற்போது அந்த கும்பல் சிபிஐ எனக்கூறி கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மூதாட்டியிடம் ஸ்கைப் கால் மூலம் சிபிஐ என மிரட்டி ரூ.10.50 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.