பட்டியலின தலைவரான எனக்கே மரியாதை இல்லாதபோது எப்படி பட்டியலின சமுதாயத்திற்கு பாஜவில் மரியாதை இருக்கும். இதற்கு முழு காரணம் மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல் முருகன், கேசவவிநாயகம் 3 நபர்கள் தான். மாநில நிர்வாகிகள் கோர் டீம் என்ற அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு தேவையான சீட்டை பிரித்துக்கொள்கின்றனர். இது எந்த அளவிற்கு கொடுமையானது. சமூக நீதி என்று பாஜ கூறுகிறது. அப்படியென்றால் வேலூர் அருகில் அந்த பெண்ணிற்கு பொதுத்தொகுதி கொடுத்து இருக்க வேண்டும். எனக்கு தொகுதி தரவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. பட்டியலின சமுதாயத்தை மதிக்கவில்லை என்று தான் கவலை. அண்ணாமலை செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜவை குழிதோண்டி புதைக்கும் பணியை அண்ணாமலை செய்து வருகிறார்.
The post பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்; தமிழகத்தில் கட்சியை குழிதோண்டி புதைத்து வருகிறார் அண்ணாமலை: மாநில நிர்வாகி தடா பெரியசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.