மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எலனா ரைபாகினா

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் உள்ளூர் வீராங்கனை மேடிசன் கீஸ் (29 வயது, 18வது ரேங்க்) உடன் மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய போலந்தின் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவிடம் (29 வயது, 16வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். கோகோ காஃப், எம்மா நவர்ரோ (அமெரிக்கா), சொரானா (ருமேனியா), கேத்தி போல்ட்டர் (இங்கிலாந்து), அனெலினா கலினினா (உக்ரைன்) ஆகியோரும் 4வது சுற்றில் தோல்வியைத் தழுவினர்.

ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் 4வது சுற்றில் மோதுவதாக இருந்த மரியா சாக்கரி (கிரீஸ்), காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். முன்னணி வீராங்கனைகள் ஜெஸ்ஸிகா பெகுலா, டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), யூலியா புடின்ட்சேவா (கஜகஸ்தான்) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

The post மயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் எலனா ரைபாகினா appeared first on Dinakaran.

Related Stories: