அருமனை அருகே பெண்ணை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு

அருமனை, மார்ச் 26 : முக்கூட்டுக்கல் குருவில்விளை பகுதியை சேர்ந்தவர் கவிதா (52). கடந்த 23ம் தேதி (சனிக்கிழமை) முக்கூட்டுக்கல் நியாயவிலை கடைக்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை ேசர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தினேஷ்குமார் (56) என்பவர் கவிதாவை தகாத வார்த்தைகள் பேசி, அவரது இருச்சக்கர வாகனத்தை மிதித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததோடு, சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் வருவதை பார்த்த தினேஷ் குமார் ஓடிவிட்டார். பறக்கும் படையினர் கவிதாவை மீட்டு அருமனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அருமனை அருகே பெண்ணை தாக்கிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: