கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதற்கான விவரம் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது appeared first on Dinakaran.