திருவாரூரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

திருவாரூர்: திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மை பணியாளர்களை அமர்த்தி அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறது. இவர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நகராட்சி அலுவலகம் எதிரே அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திருவாரூர் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கராம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொண்டு நிறுவனத்தினரிடம் பேசி உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

The post திருவாரூரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: