ஆனால் தற்போது பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பஸ் நிலைய தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இதனால் பஸ் நிலைய பிளாட்பாரங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இது பற்றி மாநகராட்சி ஆணையருக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் நேற்று இரவு மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பிளாட்பாரங்களில் கிடந்த குப்பைகளை அகற்றி, தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். வாரத்தில் 3 நாட்கள் தற்போது தூய்ைம பணி நடைபெற வேண்டும் என ஆணையர் அரவிந்த் கிருஷ்ணா, உத்தரவிட்டுள்ளார்.
The post வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணி: பிளாட்பாரங்களை கழுவி சுத்தம் செய்தனர் appeared first on Dinakaran.