காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்: சா.மு.நாசர் எம்.எல்.ஏ தகவல்

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சா.மு.நாசர் விடுத்துள்ள அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அறிமுக கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சா.மு.நாசர் விடுத்துள்ள அறிக்கை:

2024ம் ஆண்டு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக அறிமுகபடுத்திடும் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தலைமையில் நாளை மாலை 4.00 மணிக்கு பூவிருந்தவல்லி, சுந்தர் மஹாலில் நடைபெற உள்ளது.

எனவே, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஜ, சிபிஎம், மதிமுக, கொ.ம.தே.க, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமைய்யம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி,

திராவிடர் கழகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் தலைமை சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ப.எல்.ஏ2, பி.எல்.சி பாக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

The post காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்: சா.மு.நாசர் எம்.எல்.ஏ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: