கிருஷ்ணகிரி, மார்ச் 24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தேசியநெடுஞ்சாலை நடுவே, தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வசதியாக தடுப்பு கம்பிகளில் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. கிருஷ்ணகிரி-சென்னை தேசிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வர்ணம் பூசும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
The post தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.