முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை பாராட்டி, நன்றி தெரிவித்தனர். இதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலினை புதிய திராவிடர் கழகம் சார்பில் அதன் நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினருமான ராஜ் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள்;

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சமூக நீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவர் வடிவேல் ராமன் மற்றும் நிர்வாகிகள்; தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில தலைவர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள்; கோயில் பூசாரி நல சங்க தலைவர் வாசு மற்றும் மாநில நிர்வாகிகள். தமிழக விவசாயிகள் வாடிநவாதார முன்னேற்ற சங்க தலைவர் பரிமளம்; தென்னிந்திய விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், நிறுவன தலைவர் சரவணன் உள்ளிட்ட பல அமைப்பினர் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: