சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழந்தார். பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சதீஷ் (26) என்பவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை அமைந்தகரை ஸ்கைவாக் அருகே போலீசார் மடக்கினர். காரை சதீஷின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய ராணிப்பேட்டையைச் சேர்ந்த அஜிம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி appeared first on Dinakaran.

Related Stories: