தொடர்ந்து 2 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள இணை சார் பதிவாளர் தையல் நாயகியின் வீட்டில் நேற்று காலை 7 மணி அளவில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
* 8 பேர் மீது வழக்குப்பதிவு
இணை சார்பதிவாளர் தையல்நாயகி, பதிவுரு எழுத்தர், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. இதில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இணை சார்பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
The post விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.