தேர்தல் பத்திரம் கேள்விக்கு பதிலளிக்க டிடிவி மறுப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்றிரவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் அளித்த பேட்டி: பாஜ கூட்டணியுடன் இணைந்து அமமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பாஜவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளேன். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். இவர் அவர் தெரிவித்தார். அதை தொடர்ந்து, தேர்தல் பத்திர ஊழல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

The post தேர்தல் பத்திரம் கேள்விக்கு பதிலளிக்க டிடிவி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: