எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: