வேளாண் பல்கலை பேராசிரியர்களுக்கு சாண எரியவாயு தொழில்நுட்ப பயிற்சி

 

கோவை, மார்ச் 16: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சாண எரிவாயு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு வேளாண் துறை சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கான 4 பயிற்சி நடந்தது.

பயிற்சியில் சாண எரிவாயு உற்பத்தி, பயன்பாடு, சுத்திகரிக்கப்பட்ட பயோமீத்தேன் தயாரிப்பு, சூரிய வெப்பம் ஒளிமின்னழுத்த தொழில்நுட்பங்கள் மற்றும் இதர புதிய புதுப்பிக்கவல்ல தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சாண எரிவாயு காலனின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்த நடைமுறை பிரச்னைகளை பற்றி அறிய பயிற்சியாளர்கள் களப்பயிற்சியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

பயிற்சி நிறைவு விழா பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. இதில், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரவிராஜ் சிறப்புரையாற்றி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

The post வேளாண் பல்கலை பேராசிரியர்களுக்கு சாண எரியவாயு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.