கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை அவ்வப்போது தொடர்ந்து பெய்தது. இதனால், இந்தப் பகுதி நீர்நிலைகளில் பரவலாக தண்ணீர் இருந்ததால் பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறப்பை தாமதம் செய்தனர். இதையடுத்து கடந்த டிச.18ம் தேதி பாசனநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், தேவாரம் வரை வந்து கொண்டிருந்த பதினெட்டாம் கால்வாய் பாசன நீர் தற்போது சில குளங்களில் தண்ணீர் நிறைந்த நிலையில் வற்றிவிட்டது. குறிப்பாக, சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம்-நாகலாபுரம் இடையே செல்லும் பதினெட்டாம் கால்வாயில் மறுகால் பாய்ந்து வந்த நீர் வெயிலின் தாக்கத்தால் தற்போது வற்றிவிட்டது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
The post 18ம் கால்வாயில் நீர்வரத்து குறைந்தது: சின்னமனூர் பகுதி விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.