மாஜி முதல்வரின் மனைவியான காங்கிரஸ் பெண் எம்பி பாஜகவில் ஐக்கியம்?: மகள் பரபரப்பு பேட்டி

சண்டிகர்: மாஜி முதல்வரின் மனைவியான காங்கிரஸ் பெண் எம்பி பிரனீத் கவுர், பாஜகவில் சேரவுள்ளதாக அவரது மகள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் காங்கிரஸ் எம்பியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரனீத் கவுரின் மகள் ஜெய் இந்தர் கவுர் அளித்த பேட்டியில், ‘லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது தாய் பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவார். அவர் விரைவில் பாஜகவில் சேருவார். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு நான் அரசியலில் ஈடுபடுவேன்.

2027ம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்க்கலாம். எனது தந்தை அமரீந்தர் சிங்கிடம் இருந்து முதல்வர் நாற்காலியை காங்கிரஸ் பறித்தது. அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார். எனது தந்தை தான் முதலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்’ என்றார். முன்னதாக நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார். பஞ்சாபில் தற்போது பாஜக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது.

The post மாஜி முதல்வரின் மனைவியான காங்கிரஸ் பெண் எம்பி பாஜகவில் ஐக்கியம்?: மகள் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: