அதன்படி, கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 5 பெண் மற்றும் 3 ஆண் சிவிங்கி புலிகள், பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் காமினி என்ற 5 வயது பெண் சிவிங்கி புலி நேற்று 5 குட்டிகளை ஈன்றது.
The post தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது appeared first on Dinakaran.