இந்நிலையில், மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் (மார்ச் 8) 11ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இன்று பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர், மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணியளவில் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெறும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
The post சதுரகிரியில் மகா சிவராத்திரி வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.