ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது. முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்தபின் விடுபட்ட இடங்களை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டது. திட்டத்தை செம்மைப்படுத்த வேண்டி இருந்ததால் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது பற்றி முடிவு செய்ய வேண்டியது கட்சித் தலைமை. விருப்பமனு தாக்கல் செய்வது எனது உரிமை என்பதால் நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
The post நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு.. விருப்ப மனு அளிப்பது எனது உரிமை: திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி!! appeared first on Dinakaran.