அரியலூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஸ்கேனிங் வசதி

அரியலூர், மார்ச் 4: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் ஸ்கேனிங் வசதிகள் செய்துத் தரப்படும் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி தெரிவித்தார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களின் நலன் கருதி விரைவில் அனைத்து ஸ்கேனிங் வசதிகள் மற்றும் செவிலியர் தங்கும் விடுதிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசதிகளை அதிகரிக்க அதற்கான ஆய்வு பணிகளை நடைபெற்று வருகிறது என்றார்.

அப்போது, இயக்குநரிடம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்கியதற்காக ரூ.1 கோடி வழங்க கோரி மருந்து வழங்கியவர்கள் மனு அளித்தனர். ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரியலூர் அரசு மருத்துவமனையில் விரைவில் ஸ்கேனிங் வசதி appeared first on Dinakaran.

Related Stories: