அதன்பேரில் அதிகாரிகள் கடைமடை பாசன பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, 2 நாட்களுக்கு மட்டும் மருதாநதி அணையிலிருந்து 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணி துறையினர் கூறுகையில், ‘கடைமடை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் நெற்பயிர்களுக்காக அணையிலிருந்து நேற்று முதல் 2 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அடைக்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் 2 நாட்கள் திறக்கப்படும்’ என்றனர். கோரிக்கையை ஏற்று வாடும் பயிரை காப்பாற்ற அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The post அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.