வீட்டுக்கு சாப்பிட வாங்க… என்ன சமைக்க வேண்டும்? ஷிண்டே, பட்நவிஸ், அஜித்பவாரை அழைக்கிறார் சரத்பவார்

மும்பை: முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் பட்நவிஸ், அஜித்பவாரை மதியம் சாப்பிட சரத்பவார் வீட்டுக்கு அழைத்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்ராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். சரத்பவார் கட்சியை உடைத்த அஜித்பவார் துணை முதல்வராக உள்ளார்.

அதே போல் பாஜவைசேர்ந்த பட்நவிஸ் இன்னொரு துணை முதல்வராக உள்ளார். இந்த கட்சிகளை எதிர்த்து இந்தியா கூட்டணி போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் சரத்பவார், உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தநிலையில் நாளை புனே மாவட்டத்தில் பாராமதி தொகுதியில் வேலைவாய்ப்பு மேளா நடக்கிறது. இதில் முதல்வர் ஷிண்டே, துணைமுதல்வர்கள் அஜித்பவார், பட்நவிஸ் பங்கேற்க உள்ளனர்.

அவர்களை எதிரி அணி என்றும் பாராமல், அனைவரும் வீட்டுக்கு சாப்பிட வரவேண்டும். உங்களுக்கு நான் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்டு சரத்பவார் அழைப்பு விடுத்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் பங்கேற்கும் விழாவிலும் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post வீட்டுக்கு சாப்பிட வாங்க… என்ன சமைக்க வேண்டும்? ஷிண்டே, பட்நவிஸ், அஜித்பவாரை அழைக்கிறார் சரத்பவார் appeared first on Dinakaran.

Related Stories: