தொடர்ந்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரஜினி பெயரில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், அவரது புகைப்படம் மற்றும் கைரேகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும், காலை 10.30 மணியளவில் ரஜினிகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ரஜினியுடன் பலர் புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்; நாவலூரில் சொத்து வாங்கிய நடிகர் ரஜினி appeared first on Dinakaran.