அநீதி இழைக்கும் அக்னிபாத் திட்டம்: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள ‘அக்னிபாத்’ திட்டமானது, ராணுவத்தில் நிரந்தரமாக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். ஒன்றிய அரசின் இந்த முடிவால், கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது. எனவே ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, முப்படைகளின் தலைவர் என்பதால், அவருக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அநீதி இழைக்கும் அக்னிபாத் திட்டம்: ஜனாதிபதிக்கு கார்கே கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: