சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர்கள்

 

கோவை, பிப். 25: கோவை மாநகராட்சி பட்ஜெட் சம்பந்தமான கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாமன்ற அனைத்து கட்சி குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இக்கூட்டத்தில், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக), மேயரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் தற்போது குப்பை அகற்றுவதற்கும், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதற்கும் போதுமான ஆட்கள் இல்லை. இதனால், சாக்கடை கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, நீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகிறது. இதனால், டெங்கு, மேலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. எனவே, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாநகர் முழுவதும், மாநகராட்சி பூங்காக்களில், குழந்தைகள் விளையாடும் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை சீர்படுத்த வேண்டும். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்த்தி வழங்கவேண்டும். மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, திட்டச்சாலை பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post சாக்கடை கால்வாய் சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.