சமாஜ்வாடி பிரமுகரின் நிறுவனத்தில் சோதனை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரூ.750கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக சாலைகள் கட்டுமானம், சுங்கச்சாவடி மற்றும் அரசின் பிற ஒப்பந்தங்களை செயல்படுத்தும் கங்கோத்ரி எண்டர்பிரைசஸ் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் அரியானாவில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தின் அலுவலகங்களிலும், அதன் உரிமையாளரான சமாஜ்வாடி கட்சி தலைவர் வினய் சங்கர் திவாரி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

The post சமாஜ்வாடி பிரமுகரின் நிறுவனத்தில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: