இயற்கை இடு பொருட்களான பசுந்தாழ் உர விதைகள், உயர் விளைச்சல் நெல் ரக விதைகள், வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள். ஜிங் சல்பேட் ஆகியவை வழங்கப்பட்டு பஞ்சகாவியா முதலான இயற்கை முறைகளை தயாரிக்கவும் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கக (இயற்கை) விவசாயத்தை கிராமங்களில் உள்ள விவசாயிகள் அனைவரும் பின்பற்றி நல்ல லாபம் ஈட்டும் பொருட்டு இயற்கை விவசாயிகளின் உற்பத்தி நிறுவனம் ஒன்று வருகின்ற 2024-25 நிதி ஆண்டில் நிறுவிட அதானி அறக்கட்டளை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 விவசாய தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாய முறைகளை கையாள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது நெற்பயிர் அறுவடை நடைபெற்று காட்டூர் கிராமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன் தலைமை தாங்கினார். விவசாயி செல்லப்பன் அனைவரும் வரவேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், நெய்த வாயல் பாலன், முன்னாள் தலைவர் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் நந்தினி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், பொன்னேரி சப் – கலெக்டர் சாகே சன்கேத் பல்வந்த் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினார்.
இதில் அங்கக சான்று துறை இயக்குநர் சுரேஷ், அதானி காட்டுபள்ளி மற்றும் எண்ணூர் துறைமுகம் தலைமை செயல் அதிகாரி கேப்டன் மதன்மோகன், தென்னிந்திய அறக்கட்டளை தலைவர் அணில் பாலகிருஷ்ணன், திட்ட மேலாளர் ஜேசுராஜ், நரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன், ஹேம்நாத், குமரன், காட்டூர் இருசப்பன், ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தான லட்சுமி கிராம நிர்வாக அலுவலர் நல்லீஸ்வரன் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை வேளாண்மை துறை, கிராம நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி செயலர், காட்டூர், கடப்பாக்கம், தத்தமஞ்சி, கொரஞ்சூர் ரெட்டிபாளையம், ஏ.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post மீஞ்சூர் அருகே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடை திருவிழா: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.